தமிழ்நாடு

சாலையின் நடுவே 3 பேருந்துகளை நிறுத்தி தகராறு - பேருந்து ஊழியர்களால் போக்குவரத்து நெரிசல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு தனியார் பேருந்து ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு தனியார் பேருந்து ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பயணிகளை ஏற்றுவது மற்றும் உரிய நேரத்தை தாண்டி புறப்படுவது உள்ளிட்ட காரணங்களால் ஒரு வாரமாக இருதரப்பினர் இடையே தகராறு இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து சாலையின் நடுவே 3 பேருந்துகளை நிறுத்திய ஊழியர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைகலப்பானது. இதனால் இருபுறமும் வாகனங்கள் சாலையில் தேங்கின. வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். போக்குவரத்து போலீசார் இல்லாத நிலையில் தகவலறிந்து வந்த திருமங்கலம் போலீசார், போக்குவரத்தை சீர் செய்து, தகராறில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை