தமிழ்நாடு

'வாட்ஸ் அப்' பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்...

'வாட்ஸ் அப்' பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநர் அரங்கநாதனை பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தந்தி டிவி
மயிலாடுதுறை கிளை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் அரங்கநாதன் என்பவர் நேற்று முன் தினம் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேரளம் வழியாக நாகைக்கு செல்லும் போது, 'வாட்ஸ் அப்' பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதனை தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் அரங்கநாதனை பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு