தமிழ்நாடு

அழகர்கோவிலுக்கு மாட்டுவண்டி பயணம் - பாரம்பரியத்தை மறக்காத மக்கள் - "ஆஹா கண்கொள்ளா காட்சியா இருக்கே"

தந்தி டிவி

சோழவந்தான் அருகே விவசாயம் செழிக்க வேண்டி 30 கி.மீ. மாட்டுவண்டி பயணம் செய்த கிராம மக்கள் அழகர் கோவிலில் வழிபட்டனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சி.புதூர் கிராம மக்கள் 2 ஆண்டுக்கு ஒருமுறை பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிகளில் பயணம் செய்கின்றனர். தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வரிசையாக மாட்டுவண்டியில் அழகர்கோவிலுக்கு சென்று அங்கேயே இரவு முழுவதும் தங்குகின்றனர். பின்னர் விவசாயம் செழிக்க வேண்டி கள்ளழகரை வழிபட்ட பின்னர், 18-ம் படி கருப்பனுக்கு கோழி, சேவல்களை பலியிட்டு சமைத்து சாப்பிட்டுவிட்டு ஊர் திரும்புகிறார்கள். பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டுவண்டிகளில் பயணம் செய்யும் கிராம மக்களை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்