தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் | BSP Armstrong Case | ThanthiTV

தந்தி டிவி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகலை வழங்குவதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் 26 பேரை போலீசார் ஆஜர்படுத்தினர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 28 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அதில், திருவேங்கடம் என்பவர் போலீசார் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அதன் நகலை வழங்குவதற்காக சிறையில் இருந்து 26 பேரை பலத்த பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள நாகேந்திரன் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் அழைத்து வரப்படவில்லை. அப்போது குற்றப்பத்திரிக்கையின் நகலை பென்டிரைவ் மூலமாக கொடுத்தபோது, அவர்கள் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. சிறைக்குள் பென்டிரைவ் அனுமதியில்லை என்றும், குற்றப்பத்திரிகை நகலை காகித வடிவில் கொடுத்தால்தான் படிக்க ஏதுவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதற்கு பென்டிரைவ் மூலமாக குற்றப்பத்திரிகை நகல்களை வழங்குவதற்கு பிஎன்எஸ் சட்டத்தில் இடமுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை வருகிற 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் அனைவரும் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்