தமிழ்நாடு

குடிநீர் குழாயில் உடைப்பு : களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம்...

ஈரோடு மாவட்டம், கங்காபுரம் அருகே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் களத்தில் இறங்கிய பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் குடிநீர் பிரச்சினை குறித்து புகார் அளித்தார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், கங்காபுரம் அருகே ராட்சத குழாயில், 3 தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரிசெய்யாததால், இந்த தண்ணீரை நம்பியுள்ள 69 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், களத்தில் இறங்கிய பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் குடிநீர் பிரச்சினை குறித்து புகார் அளித்தார். இதன் அடிப்படையில்

ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்றது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு