தமிழ்நாடு

குடிநீர் குழாயில் உடைப்பு : களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம்...

ஈரோடு மாவட்டம், கங்காபுரம் அருகே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் களத்தில் இறங்கிய பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் குடிநீர் பிரச்சினை குறித்து புகார் அளித்தார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், கங்காபுரம் அருகே ராட்சத குழாயில், 3 தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரிசெய்யாததால், இந்த தண்ணீரை நம்பியுள்ள 69 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், களத்தில் இறங்கிய பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் குடிநீர் பிரச்சினை குறித்து புகார் அளித்தார். இதன் அடிப்படையில்

ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்றது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை