தமிழ்நாடு

மாட்டு வண்டியில் நடந்த மணமக்கள் அழைப்பு

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் மாட்டு வண்டியில் நடைபெற்ற மணமக்கள் அழைப்பு பலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.

தந்தி டிவி

திருமணத்தின் போது மாப்பிள்ளை அழைப்பு, மணமகள் அழைப்பு போன்றவை ஆடம்பர கார்களிலேயே நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் நடைபெற்ற திருமணத்தில், மாட்டு வண்டியில் மணமக்கள் அழைப்பு நடைபெற்றது. மணமக்கள் அருண் நேரு, கலைவாணி இருவரும் கம்ப்யூட்டர் பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.. சென்டை மேளம் முழங்க நடந்த மணமக்கள் அழைப்பில், மாட்டு வண்டியில் பெண்ணை அமர வைத்து மாப்பிள்ளையே, மாட்டு வண்டியை ஓட்டி வந்தார். இதனை ஏராளமான மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும், கிடுகிடுவென விலை ஏறும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்த அழைப்புக்கு ஏற்பாடு செய்ததாக மணமகன் அருண் நேரு தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ