தமிழ்நாடு

குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக புகார் : அரசு தரப்பு சிறப்பு பெண் வழக்கறிஞர் பணி நீக்கம்

குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து அரசு தரப்பு சிறப்பு பெண் வழக்கறிஞரை ஆளுநர் உத்தரவின் படி பணிநீக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து அரசு தரப்பு சிறப்பு பெண் வழக்கறிஞரை ஆளுநர் உத்தரவின் படி பணிநீக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் தனலட்சுமி. குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு சாதகமாக வாதாடி வரும் இவர், பாதிக்கப்பட்டவர்களுடன் சமரசம் செய்து வைப்பதாக கூறி மிரட்டுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டது. மேலும் சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டதோடு, வழக்கை திரும்ப பெறக்கோரி சிறுமி தரப்பை மிரட்டியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆளுநரின் உத்தரவின்படி தனலட்சுமியை பணி நீக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை