தமிழ்நாடு

நடிகர் ரஜினிகாந்திற்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு

ரஜினி மீது சினிமா பைனான்சியர் போத்ரா, நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

தந்தி டிவி

திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம், பெற்ற கடன் 65 லட்சம் ரூபாய்க்காக, அவர் அளித்த காசோலைகள் பணமின்றி திரும்பி வந்தன. இதையடுத்து போத்ரா, நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தாக்கல் செய்தார். இதில் நடிகர் ரஜினியை எதிர்மனுதாரராக சேர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் போத்ரா மற்றொரு வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக ரஜினி தாக்கல் செய்த பதில் மனுவில், பணம் பறிப்பதற்காக போத்ரா வழக்கு தொடர்ந்ததாகக் கூறியிருந்தார். இதையடுத்து, ரஜினிக்கு எதிராக போத்ரா, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினி, மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை