தமிழ்நாடு

வீட்டின் கதவை உடைத்து 131 சவரன் நகை கொள்ளை - அடையாளம் தெரியாத நபர்கள் துணிகரம்

வீட்டின் கதவை உடைத்து 131 சவரன் நகை கொள்ளை - அடையாளம் தெரியாத நபர்கள் துணிகரம்

தந்தி டிவி

வீட்டின் கதவை உடைத்து 131 சவரன் நகை கொள்ளை - அடையாளம் தெரியாத நபர்கள் துணிகரம்

கோவையில் இரும்பு வியாபாரியின் வீட்டின் கதவை உடைத்து 131 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.மணியகாரம்பாளையம் வேலவன் நகரைச் சேர்ந்த தினகரன் என்பவர், இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர், குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று விட்டு, நேற்று இரவு வீடு திரும்பிய போது, கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 131 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்த போலீசார், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி