தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் பெண் மூளைச்சாவு - மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

தவறான சிகிச்சையால், பெண் மூளைச்சாவு அடைந்த‌தாக கூறி, பெண்ணின் உறவினர்கள், தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

தந்தி டிவி
தவறான சிகிச்சையால், பெண் மூளைச்சாவு அடைந்த‌தாக கூறி, பெண்ணின் உறவினர்கள், தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர். ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரத்தை சேர்ந்த ஞான சகுந்தலா என்பவருக்கு, தனியார் மருத்துவனையில் கர்ப்ப‌ப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அங்கு மருத்துவரின் அறிவுரைப்படி அவருக்கு இரண்டு ஊசிகள் போடப்பட்ட நிலையில், திடீரென வாயில் நுரை தள்ளியது. மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துமனைக்கு கொண்டு சென்ற போது, சகுந்தலா மூளைச்சாவு அடைந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி மருத்துவமனையை பூட்டினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"