தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் பெண் மூளைச்சாவு - மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

தவறான சிகிச்சையால், பெண் மூளைச்சாவு அடைந்த‌தாக கூறி, பெண்ணின் உறவினர்கள், தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

தந்தி டிவி
தவறான சிகிச்சையால், பெண் மூளைச்சாவு அடைந்த‌தாக கூறி, பெண்ணின் உறவினர்கள், தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர். ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரத்தை சேர்ந்த ஞான சகுந்தலா என்பவருக்கு, தனியார் மருத்துவனையில் கர்ப்ப‌ப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அங்கு மருத்துவரின் அறிவுரைப்படி அவருக்கு இரண்டு ஊசிகள் போடப்பட்ட நிலையில், திடீரென வாயில் நுரை தள்ளியது. மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துமனைக்கு கொண்டு சென்ற போது, சகுந்தலா மூளைச்சாவு அடைந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி மருத்துவமனையை பூட்டினர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்