தமிழ்நாடு

தனியார் விடுதியில் காதலியை கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை

thanthitv

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த பவ்யா ஆகிய இருவரும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பாரதி பெருமாள் தூக்கில் தொங்குவதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றபோது, பவ்யா ரத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், பவ்யாவை கத்தியால் வெட்டியும், தலையணையால் முகத்தை அழுத்தியும் பாரதி பெருமாள் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் பாரதி பெருமாள் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது உறுதியாகியுள்ளது.

இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்