தமிழ்நாடு

ஆசை காதலியோடு நெருக்கமாக இருந்த போட்டோவை பகிர்ந்த பாய் பெஸ்டி - தட்டி கேட்ட காதலன் மீது வெறிச்செயல்

தந்தி டிவி

பர்கூர் அருகே, காதலியின் கை கோர்த்தபடியான புகைப்படத்தை, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த நபரை தட்டிக் கேட்ட காதலன் மீது கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாட்டாரப்பள்ளி கிராமத்தில் கறிக்கடை நடத்தி வரும் சந்தோஷ்குமார் என்பவரும், தபால்மேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலதா என்பவரும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில், தர்மகவுண்டனூரை சேர்ந்த காளிதாஸ் என்பவர், ஸ்ரீலதாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததாக, தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ்குமார், இது குறித்து காளிதாஸிடம் தொலைபேசியில் வாக்குவாதம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ், தனது நண்பர்களுடன் வந்து இரும்பு ராடால் சந்தோஷ்குமார் மீது கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சந்தோஷ் குமார், பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்