தமிழ்நாடு

சென்னையில் புத்தக கண்காட்சி: கார்ட்டூன் மூலம் வரலாறு சொல்லும் நாவல்கள்

சென்னையில் தொடங்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியை பார்வையிட வரும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

தந்தி டிவி

* சென்னை நந்தனம் திடலில், 42-வது புத்தக கண்காட்சி வாசிப்பை வாழ்க்கையாக்குவோம் என்ற நோக்கத்தோடு நடைபெற்று வருகிறது. 200க்கும் மேற்பட்ட அரங்குகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகள், லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் என பரந்து விரிந்திருக்கிறது புத்தக கண்காட்சி.

* செல்போன், டேப்களில் மூழ்கி கிடக்கும் சிறுவர்கள் வாசிப்பை நோசிக்கும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம் கதை சொல்லும் புத்தகங்கள் கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளன. இளைஞர்கள், பெரியோர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

* சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கும் இளைஞர்கள், நாட்டின் வரலாறு, அரசியல், கலாசாரத்தை அறிந்து கொள்ள புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரித்து கொள்ள வேண்டும் எனவும், அதற்கென நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் புத்தக பிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

* பாடம் தவிர்த்து பிற நூல்களை வாசிப்பதால், ஒருவரின் சிந்தனை திறன் மேலோங்கும். சொல் மற்றும் கற்பனை வளம் பெருகும். யாரிடமும் தயக்கமின்றி பேசமுடியும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, தனிமனித மேம்பாட்டுக்கு புத்தக வாசிப்பு அவசியமாக உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்