ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் பெரும் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தததால் நீதிமன்ற வளாகத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற இமெயிலில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மெயில் வந்துள்ளது.
உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் நீதிமன்ற வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.