தமிழ்நாடு

வெடிகுண்டு மிரட்டலின் எதிரொலி - நீதிமன்றத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

157 ஆண்டு கால பாரம்பரிய சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, கடந்த இரு தினங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.

தந்தி டிவி

157 ஆண்டு கால பாரம்பரிய சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, கடந்த இரு தினங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. அதை தொடர்ந்து, நடந்த உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு கூட்டத்தில், பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் 7 வாயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கமாண்டோ வீரர்களும் நுழைவு வாயில்களில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகன நிறுத்தப்பட்ட பிறகே சோதனை நடத்தப்படுகிறது. வழக்கறிஞர்களின் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்