தமிழ்நாடு

பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைத்து தர அரசு அதிகாரிகள் மறுப்பு - வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைக்க வலியுறுத்தி ஒரு பிரிவு மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைக்க வலியுறுத்தி, ஒரு பிரிவு மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சுடுகாடு அமைத்து தரக்கோரி, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சமுதாய மக்கள் போராடி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அப்பகுதி மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், கிராமத்தின் மையப்பகுதியில் பாடை கட்டியும், கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்