தமிழ்நாடு

பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைத்து தர அரசு அதிகாரிகள் மறுப்பு - வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைக்க வலியுறுத்தி ஒரு பிரிவு மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைக்க வலியுறுத்தி, ஒரு பிரிவு மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சுடுகாடு அமைத்து தரக்கோரி, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சமுதாய மக்கள் போராடி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அப்பகுதி மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், கிராமத்தின் மையப்பகுதியில் பாடை கட்டியும், கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை