தமிழ்நாடு

பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைத்து தர அரசு அதிகாரிகள் மறுப்பு - வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைக்க வலியுறுத்தி ஒரு பிரிவு மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் பெரிய தொட்டிப்பாளையம் பகுதியில் சுடுகாடு அமைக்க வலியுறுத்தி, ஒரு பிரிவு மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சுடுகாடு அமைத்து தரக்கோரி, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சமுதாய மக்கள் போராடி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அப்பகுதி மக்கள் சுதந்திர தின விழாவை புறக்கணித்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், கிராமத்தின் மையப்பகுதியில் பாடை கட்டியும், கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு