தமிழ்நாடு

"பாஜக பிரமுகர் கொலைக்கு தனிப்பட்ட விரோதமே காரணம்" - திருச்சி காவல் ஆணையர் பேட்டி

தனிப்பட்ட விரோதமே பாஜக பிரமுகர் கொலைக்கு காரணம் என திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளி மிட்டாய் பாபு சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது நண்பர் ஹரி பிரசாத்தையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் மேலும் 5 பேர் உடந்தையாக இருப்பதாக இவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜூ, தனிப்பட்ட விரோதமே இந்த கொலைக்கான காரணம் என்றும், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்