தமிழ்நாடு

"பாஜக பிரமுகர் கொலைக்கு தனிப்பட்ட விரோதமே காரணம்" - திருச்சி காவல் ஆணையர் பேட்டி

தனிப்பட்ட விரோதமே பாஜக பிரமுகர் கொலைக்கு காரணம் என திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளி மிட்டாய் பாபு சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது நண்பர் ஹரி பிரசாத்தையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் மேலும் 5 பேர் உடந்தையாக இருப்பதாக இவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜூ, தனிப்பட்ட விரோதமே இந்த கொலைக்கான காரணம் என்றும், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு