தமிழ்நாடு

தடையை மீறி ஆர்ப்பாட்டம் - தஞ்சையில் பாஜகவினர் கைது

தந்தி டிவி

தஞ்சாவூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உட்பட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற தஞ்சாவூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி தொடக்க விழாவில், பாஜகவினரை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஒருமையில் பேசியதாக கூறி, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி தராத நிலையில், தடையை மீறி போராடுவதற்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வந்த பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி