தமிழ்நாடு

நான்கு உலோகங்களை கொண்டு செய்யப்பட 155 கிலோ 'தூண்டா' விளக்கு

கும்பகோணத்தில், நான்கு உலோகங்களை கொண்டு வித்தியாசமான தூண்டா விளக்கு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஐம்பொன் சிலைகள், விளக்குகள் தயாரிப்புக்கு புகழ் பெற்றது, கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை. இதன் அருகில் உள்ள திம்மக்குடியில் ஐந்தே முக்கால் அடி உயரத்திற்கு செம்பு, வெண்கலம், பித்தளை உள்ளிட்ட 4 உலோகங்களை கொண்டு கலைநுணுக்கத்துடன் கூடிய தூண்டா விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 155 கிலோ எடையுள்ள இந்த விளக்கில் தீபம் எரியும் பகுதி, எண்ணெய்யில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மாத காலத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பில் இந்த தூண்டா விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மௌன சுவாமிகள் கோவிலுக்கு இந்த வித்தியாசமான விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ