தமிழ்நாடு

பாரதியார் பிறந்த நாளையொட்டி ஜதி ஊர்வலம் - அமைச்சர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு

மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி சென்னையில் ஜதி ஊர்வலம் நடைபெற்றது.

தந்தி டிவி

வானவில் பண்பாட்டு மையம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் முகப்பிலிருந்து பாரதி நினைவு இல்லம் வரை ஜதி பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ , மாஃபா பாண்டியராஜன் , பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிடோர் பங்கேற்றனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பேசிய இல.கணேசன், பாரதியாரின் பூரண சுயராஜ்யம் இன்னும் வரவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ விரைவில் உலக தமிழ் மாநாடு நடத்தப்பட உள்ளதாக கூறினார்.

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , உலக பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படும் தமிழ் இருக்கைக்கு பாரதியாரின் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி