#sathankulam | #sathankulamcase தண்டனை அறிவிக்கும் முன் குற்றவாளிகளுக்கு மெயின் டெஸ்ட் - பரபரக்கும் சாத்தான்குளம் வழக்கு சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 காவலர்கள், நீதிமன்ற உத்தரவின்படி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மனநிலை பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் உண்மை என நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், தண்டனைக்கு முன் அவர்களின் உளவியல் நிலை ஆய்வு செய்யப்படுகிறது. பரிசோதனைகள் முடிந்ததும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. பின்னர் அவர்கள் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.