தமிழ்நாடு

பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு, சுகாதாரத்துறை செயலர் கடிதம்

மருத்துவமனை, போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க கோரி, டிஜிபிக்கு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

தந்தி டிவி

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில், மருத்துவர்கள் தொடர்ந்து 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களால், நோயாளிகள், போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்கள் ஆகியோருக்கு பிரச்சினை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, டிஜிபி திரிபாதிக்கு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார். இதில், பேச்சுவார்த்தைக்கு பின்னும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து, கடிதத்தை ஏற்றுக்கொண்ட டிஜிபி, மருத்துவமனைக்கு பலத்தை பாதுகாப்பை வழங்கியுள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு