தமிழ்நாடு

"பி.இ.பட்டதாரிகள்,ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் விவகாரம்", இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை - ஆசிரியர் தேர்வு வாரியம்

குறிப்பிட்ட பாடப் பிரிவில் பொறியியல் படித்தவர்கள், பி.எட் படித்துவிட்டு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
பொறியியல் படிப்பில், கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளை படிக்கும் மாணவர்கள், பி.எட், படிப்பதற்கு தமிழக அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளது. அந்த மாணவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, அதன்பின் மற்றொரு தேர்வெழுதி வெற்றி பெற்றால் ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அனுமதிப்பது குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வின் போது, முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மற்றொரு போட்டித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசு, அரசாணை வெளியிட்ட நிலையில், இதுவரை ஒரு தேர்வு கூட நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்