தமிழ்நாடு

"பி.இ.பட்டதாரிகள்,ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் விவகாரம்", இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை - ஆசிரியர் தேர்வு வாரியம்

குறிப்பிட்ட பாடப் பிரிவில் பொறியியல் படித்தவர்கள், பி.எட் படித்துவிட்டு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
பொறியியல் படிப்பில், கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளை படிக்கும் மாணவர்கள், பி.எட், படிப்பதற்கு தமிழக அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளது. அந்த மாணவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, அதன்பின் மற்றொரு தேர்வெழுதி வெற்றி பெற்றால் ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அனுமதிப்பது குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வின் போது, முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மற்றொரு போட்டித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசு, அரசாணை வெளியிட்ட நிலையில், இதுவரை ஒரு தேர்வு கூட நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்