தமிழ்நாடு

பவானிசாகர்: தெங்குமரஹாடா சாலையில் தேங்கிய ஆற்றுநீர் - அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், தெங்குமரஹாடா செல்லும் வனசாலையில் இருவேறு இடங்களில் உள்ள பள்ளங்களில் 3 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், தெங்குமரஹாடா செல்லும் வனசாலையில் இருவேறு இடங்களில் உள்ள பள்ளங்களில் 3 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய வன கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப்பேருந்துகள், கடந்த 3 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்டு வரும் 3 கிராம மக்களும் டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்களில் பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளுக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைத்து, போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?