தமிழ்நாடு

பவானிசாகர்: தெங்குமரஹாடா சாலையில் தேங்கிய ஆற்றுநீர் - அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், தெங்குமரஹாடா செல்லும் வனசாலையில் இருவேறு இடங்களில் உள்ள பள்ளங்களில் 3 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், தெங்குமரஹாடா செல்லும் வனசாலையில் இருவேறு இடங்களில் உள்ள பள்ளங்களில் 3 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய வன கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப்பேருந்துகள், கடந்த 3 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்டு வரும் 3 கிராம மக்களும் டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்களில் பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளுக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைத்து, போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்