தமிழ்நாடு

வங்கி கிளையில் புகுந்து லாக்கரை உடைக்க முயற்சி : கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

மயிலாடுதுறையில் வங்கிக்கிளை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சித்தபோது அபாய சங்கு ஒலித்தால் தப்பி ஓடியுள்ளனர்.

தந்தி டிவி

மயிலாடுதுறையில் வங்கிக்கிளை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சித்தபோது அபாய சங்கு ஒலித்தால் தப்பி ஓடியுள்ளனர். கூறைநாடு பகுதியில் இந்தியன் வங்கியிலிருந்து இரவு 8 மணி அளவில் அபாய சங்கு ஒலித்துள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வங்கிக்கதவின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு, வங்கிக்குள் சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. அங்குள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அபாய சங்கு ஒலித்ததால் வங்கி கொள்ளை திட்டத்தை கைவிட்டு கொள்ளையர்கள் தப்பி

ஓடியிருக்கலாம் என கருதப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்