தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி : தலைமறைவாக இருந்த நபரை கைதுசெய்த போலீசார்

வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.

தந்தி டிவி
வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர். சென்னை பெருமாள்பேட்டையை சேர்ந்த ராஜ்பரத் என்பவர், தனியார் வங்கியில் வேலைவாங்கி தருவதாக கூறி, பழவந்தாங்கலை சேர்ந்த பிரதீப்குமாரிடம்13 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி தராததால், அவர் மீது பிரதீப்குமார், வேப்பேரி போலீசில் புகார் அளித்தார். இதேபோன்று மகேஷ் என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக ராஜ்பரத் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிந்து தேடிவந்த போலீசார், தலைமறைவாக இருந்த ராஜ்பரத்தை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்