தமிழ்நாடு

"வங்கிகளில் பணம் எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ" - வெளியான புதிய உத்தரவு

தந்தி டிவி

பண நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என, தேர்தல் அதிகாரிகளுக்கு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், வருமானவரித்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், வங்கிகளில் பணம் பெரிய தொகையை எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பண நடமாட்டத்தை வங்கி அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்த பணம் எடுத்துச்சென்றாலும், உரிய ஆவணம் இருக்கிறதா என சரிபார்த்து அனுமதிக்க வேண்டும் என்ற அவர், ஐ.டி., அதிகாரிகள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை