தமிழ்நாடு

சத்திய ஞான சபையை புனித இடமாக அறிவிக்க பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் கோரிக்கை

தந்தி டிவி

வடலூர் சத்திய ஞான சபையை புண்ணிய பூமியாக அறிவிக்க வேண்டும் என பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வள்ளலார் நிறுவிய தர்மசாலையின் அணையா அடுப்பின் 159வது தொடக்க விழா நடைபெற்று வருகிறது. பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழிக் கூட்டமைப்பு சார்பில் ஏராளமான தொண்டர்கள் வடலூர் வந்துள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் குமார், வடலூரை புனித நகரமாக அறிவிக்கவில்லை என்றாலும் சத்திய ஞான சபையை மட்டும் புண்ணிய பூமியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். வள்ளலார் வாழ்ந்த கருங்குழி, மேட்டுக்குப்பம், மருதூர் பகுதிகளை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’