தமிழ்நாடு

டியூஷன் படிக்க வந்த மாணவியை கடத்திய டீச்சர்.. 45 நாட்களுக்கு பிறகு கிடைத்த செய்தி -அதிர்ந்த போலீசார்

தந்தி டிவி

பெங்களூரில், மாணவி ஒருவர் ஆசிரியரால் கடத்தப்பட்ட நிலையில் 45 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என கடந்த நவம்பர் 23ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவிக்கு டியூசன் எடுத்த அபிஷேக் கவுடா என்னும் ஆசிரியர் மாணவியை கடத்திவிட்டதாக அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. புகாரை பதிவு செய்து கொண்ட போலீசார் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேலாக மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில், ஆசிரியர் அபிஷேக் கவுடா, மாணவியுடன் வாடகை வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், மாணவியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். முதல் கட்ட விசாரணையில் அபிஷேக் கவுடாவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"