தமிழ்நாடு

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது. அங்குள்ள கிராமங்களில் பதனீர், பனை வெல்லம், பனங் கற்கண்டு உள்ளிட்ட பனை பொருட்கள் தயாரிப்பில் பலர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பனை தொழிலாளர்கள் கூறுகையில், கோடைக்காலத்தில் நுங்காக விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதாகவும், பெங்களூருக்கு அனுப்புவதால் நுங்கு விலை அதிகரித்துள்ளதாகவும் கூறினர். பனை மரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு விறகாக பயன்படுத்துவதால் பனை மரங்கள் அழிந்து வருவதாகவும், பனை மரங்களை வெட்ட அரசு தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை