திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றை ஒட்டிய பகுதியில், வினோத்குமார் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த போது காலில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது. அவர் மணலை தோண்டி பார்த்த போது அது ஐயப்பன் சிலை என்பது தெரியவந்தது. தகவலறிந்த வந்த வருவாய் துறையினர் சிலையை மீட்டு தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து அறிக்கை தயார் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலையை ஒப்படைக்க உள்ளதாக வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.