தமிழ்நாடு

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து : 15 பேர் காயம்

சத்தியமங்கலம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன், தலை கீழாக கவிழ்ந்தது.

தந்தி டிவி
சத்தியமங்கலம் அருகே, ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன், தலை கீழாக கவிழ்ந்தது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சபரிமலைக்கு ஒரு வேனில் புறப்பட்டுச் சென்றனர். வழியில், பன்னாரி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக, ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் சென்றபோது, அரியப்பம்பாளையம் என்ற இடத்தில், சாலையோரமாக வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில், வேனில் இருந்த ஐயப்ப பக்தர்கள் 15 பேர் காயமடைந்தனர். அவர்களை சத்தியமங்கலம் போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 7 பேர், படுகாயமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை