தமிழ்நாடு

மணப்பாறை : மாரியம்மனுக்கு பூக்குழி இறங்கிய அய்யப்ப பக்தர்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூரில் இந்தாண்டும் வழக்கமான உற்சாகத்துடன் அய்யப்ப பக்தர்கள் மாரி அம்மனுக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூரில் இந்தாண்டும் வழக்கமான உற்சாகத்துடன் அய்யப்ப பக்தர்கள் மாரி அம்மனுக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா நேற்று காலை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சின்ன மற்றும் பெரிய மாரியம்மன் சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தது. சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து, கோவில் முன்பு அமைக்கப்பட்டி இருந்த குண்டத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஐயப்பா கோசத்துடன் பூக்குழி இறங்கினர். இதைத் தொடர்ந்து அய்யப்பனுக்கு தீபாராதனை காட்டிய பின்னர், பஜனை நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடந்தது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி