தமிழ்நாடு

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவிகள் அளித்த புகார் மீது உடனடி நடவடிக்கை

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, மாணவிகள் அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, மாணவிகள் அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை அருகே உள்ள பீடம் பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட குழந்தைகள் நல அலுவலர் தீபாவை, சந்தித்த மாணவிகள் சிலர், நடுபாளையத்தை சேர்ந்த வெங்கடேஸ், லட்சுமணன், ராஜன் ஆகியோர் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தீபா அளித்த புகாரில் நடவடிக்கையில் இறங்கிய சூலூர் போலீசார், வெங்கடேஷை கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ