தமிழ்நாடு

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவிகள் அளித்த புகார் மீது உடனடி நடவடிக்கை

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, மாணவிகள் அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, மாணவிகள் அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை அருகே உள்ள பீடம் பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட குழந்தைகள் நல அலுவலர் தீபாவை, சந்தித்த மாணவிகள் சிலர், நடுபாளையத்தை சேர்ந்த வெங்கடேஸ், லட்சுமணன், ராஜன் ஆகியோர் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தீபா அளித்த புகாரில் நடவடிக்கையில் இறங்கிய சூலூர் போலீசார், வெங்கடேஷை கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்