தமிழ்நாடு

ஆட்டோ ரேஸில் மெக்கானிக் உயிரிப்பு : 6 பேர் கைது

சென்னையில், தாம்பரம் - புழல் புறவழிச்சாலையில், ஆட்டோ ரேஸில் ஈடுபட்டு மெக்கானிக் பலியான விவகாரத்தில், 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

வில்லிவாக்கம், திருவேங்கடம் தெருவை சேர்ந்த பிரபாகர்,விபத்தில் அடிபட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தாம்பரம் - புழல் புறவழிச்சாலையில், ஆட்டோ ரேஸில் ஈடுபட்டபோது, பிரபாகர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, ரேசில் ஈடுபட்டவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ரேசின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து, பூந்தண்டலத்தைச் சேர்ந்த மதார்சா, கிண்டியை சேர்ந்த தனசேகர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 ஆட்டோக்கள், ஒரு கார், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், உயிரிழந்த பிரபாகர், ரேஸ் ஆட்டோக்களை தயார் செய்வதிலும், ரேசில் பங்கு பெறுவதிலும் கைதேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

🔴LIVE : Annamalai | "We The Leaders.." - அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Chennai | சென்னையில் விமான சேவை குறைப்பு.. அவதியில் பயணிகள்

Chennai | சென்னை ஏர்போர்ட்டில் கேட்பாரற்று கிடந்த பார்சல்.. திறந்து பார்த்தும் அதிர்ச்சி

Today Gold Price | சரிந்தது தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்

Nellai NEET Exam | நெல்லைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய நீட் வினாத்தாள்