தமிழ்நாடு

புதுச்சேரியில் 40 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு- மசாஜ் செண்டருக்கு சீல் வைத்த அதிகாரிகள்

புதுச்சேரியில் 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 40 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

புதுச்சேரியில் 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 40 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த வாரம் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபட்ட 10 பெண்கள் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இதில் 17 வயது சிறுமி ஒருவரும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் மற்றும் சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் என 40 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த உருளையான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய நிறுவனத்தின் கட்டிடங்களை புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு