தமிழ்நாடு

புகார் அளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்கும் உதவி ஆய்வாளர்

சென்னையில் லஞ்சப்புகாரில் சிக்கிய மத்திய குற்றப் பிரிவை சேர்ந்த 2 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
சென்னையில் லஞ்சப்புகாரில் சிக்கிய மத்திய குற்றப் பிரிவை சேர்ந்த 2 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆவண மோசடி தொடர்பான புகார் அளிக்க மகேந்திரன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரை அணுகியுள்ளார். அப்போது இந்த வழக்கை சுமூகமாக முடிப்பதாக கூறி மத்திய குற்றப்பிரிவின் உதவி ஆய்வாளர்கள் சிவஞானம், சந்தியா ஆகிய இருவரும் இரண்டரை லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில் காவல் ஆணையர் விஸ்வநாதன் 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இருவரும் லஞ்சம் கேட்பது குறித்த ஆடியோ வெளியாகி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்