Students | Parents | பெற்றோர், மாணவர்கள் கவனத்திற்கு..!அதிமுக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு #Students #Parents #HSC #12thResult தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் இனிதே நிறைவடைந்தன. மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில், சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுடன் தேர்வுகள் முடிவுக்கு வந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள 89 மையங்களில் விறுவிறுப்பாகத் தொடங்க உள்ளன. ஏற்கனவே திட்டமிட்டபடி, மே மாதம் 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.