பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் இயந்திரம் செயல்படவில்லை என வங்கி அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்தனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொள்ளை முயற்சி குறித்து தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.