தமிழ்நாடு

நடுக்கடலில் நடந்த பயங்கரம் - உயிரை பிடித்து ஓடிவந்த தமிழர்கள்

தந்தி டிவி

நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 8 மீனவர்கள் காயமடைந்தனர்.ஆறுகாட்டுத்துறையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்களின் படகை மறித்து, படகில் ஏறி, கத்தி, கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். படகில் இருந்த மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு விரட்டியடித்தனர். காயமடைந்த மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாஸ்கர், அருள்ராஜ், சுப்பிரமணியன், வெற்றிவேல் ஆகியோருக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, 21 தையல்கள் போடப்பட்டன. அதில், பாஸ்கர், அருள்ராஜ் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செந்தில் அரசன், மருது, வினோத் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில், வேதாரண்யம் அடுத்த வெள்ளபள்ளத்தை சேர்ந்த அருள்செல்வம் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி