தமிழ்நாடு

மருந்தகத்திற்குள் புகுந்து இளம்பெண் மீது தாக்குதல் - பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்ததால் வெறிச்செயல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், மருந்தகத்திற்குள் புகுந்து, இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

தந்தி டிவி

காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள மருந்தகத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணுக்கு, தனியார் பேருந்து உரிமையாளர் பாண்டிதுரை என்பவர் கடந்த 3 மாதமாக பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணியில் இருந்த பெண்ணை பாண்டித்துரை தொலைபேசியில் அழைத்து தவறாக பேசியுள்ளார். இதை மருந்தகத்தின் உரிமையாளர் ரவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டிதுரை அடியாட்களுடன் வந்து மருந்தகத்தை சூறையாடினார். மேலும் கடையில் இருந்த பெண்ணையும், கடை உரிமையாளர் ரவியையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’