தமிழ்நாடு

சட்ட அமைச்சர் அலுவலகம் மீது தாக்குதல் : அலுவலக கண்ணாடி சேதம்- போலீஸ் விசாரணை

விழுப்புரம் நகரில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகம் சேதம் அடைந்தது.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகில் செயல்பட்டு வரும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்தை அவரது உதவியாளர் திறக்க வந்துள்ளார். அப்போது, அலுவலக கண்ணாடி உடைந்து கிடப்பதை அவர் பார்த்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரின் உதவியாளர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்