தமிழ்நாடு

குடிபோதையில் சுற்றி திரிந்த கொள்ளையன் - சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

திருச்சியில், கடந்த நான்கு நாட்களுக்கு முன் , சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

கடந்த 20 ஆம் தேதி. திருச்சி பாலக்கரையில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப சென்ற ஊழியர்களை திசை திருப்பி, 16 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், பெரம்பலூரில் கைது செய்யப்பட்டுள்ளான்.

பெரம்பலூர் பகுதியில், குடிபோதையில் ஆட்டோவில் சுற்றித் திரிந்த அவனது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர், காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஸ்டீபன் என்பதும் , திருச்சி வங்கி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவனிடமிருந்து 16 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்டது எப்படி என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனிப்படை போலீசார் கொள்ளையனுக்கு வலை விரித்த நிலையில், நேரடியாக வந்து சிக்கிய அவனை, விசாரிப்பதற்கான போலீசார் திருச்சி கொண்டு சென்றுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி