காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறப் பட்டு ஆடையில், பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்து வருகிறார்.
இதன்படி 15 ஆம் நாளான இன்று, அத்திவரதருக்கு நீலம் மற்றும் பச்சை நிறம் கலந்த பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டது. பஞ்சவர்ண மாலை அணிந்து அருள்பாலித்து வரும், அத்திவரதரை தரிசனம் செய்ய அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.