தமிழ்நாடு

பாகப் பிரிவினையில் பயங்கரம்.. நடுநடுங்கிபோன செஞ்சி

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை ஊராட்சி வடக்குதாங்கல் பகுதியைச் சேர்ந்த மறைந்த நடேசன் - லட்சுமி தம்பதியின் ஒரு ஏக்கர் சொத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, அவரது கோவிந்தராஜ், மகாலிங்கம் ஆகிய 2 மகன் வழி வாரிசுகளுக்குள் ஏற்பட்ட தகராறு மோதலாக வெடித்தது. ஊர் பெரியவர்கள் முன்னிலையில், சமாதானம் பேசியும் பயனில்லை. இந்நிலையில், பொங்கல் விடுமுறை நாளில் மகாலிங்கம் என்பவரின் மகனான சேகர் என்பவரை, ஏழுமலை என்பவரின் மகன்களான கிருஷ்ணன், அரவிந்த் ஆகிய 2 பேர் மதுபோதையில் கத்தி உள்ளிட்டவையால் பயங்கரமாக தாக்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் கிருஷ்ணன், அரவிந்த் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை