தமிழ்நாடு

பாகப் பிரிவினையில் பயங்கரம்.. நடுநடுங்கிபோன செஞ்சி

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை ஊராட்சி வடக்குதாங்கல் பகுதியைச் சேர்ந்த மறைந்த நடேசன் - லட்சுமி தம்பதியின் ஒரு ஏக்கர் சொத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, அவரது கோவிந்தராஜ், மகாலிங்கம் ஆகிய 2 மகன் வழி வாரிசுகளுக்குள் ஏற்பட்ட தகராறு மோதலாக வெடித்தது. ஊர் பெரியவர்கள் முன்னிலையில், சமாதானம் பேசியும் பயனில்லை. இந்நிலையில், பொங்கல் விடுமுறை நாளில் மகாலிங்கம் என்பவரின் மகனான சேகர் என்பவரை, ஏழுமலை என்பவரின் மகன்களான கிருஷ்ணன், அரவிந்த் ஆகிய 2 பேர் மதுபோதையில் கத்தி உள்ளிட்டவையால் பயங்கரமாக தாக்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் கிருஷ்ணன், அரவிந்த் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு