தமிழ்நாடு

ஆறுமுகசாமி ஆணையம் : ராமமோகனராவ், ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க மனு தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகனராவ், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க ஆணைய வழக்கறிஞர் முகமது ஜாபருல்லா கான் மனு தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி
ஜெயலலிதாவுக்கு அப்பலோ மருத்துவமனையில் அளித்த சிகிச்சைகள் அனைத்தும் தெரிந்த நபர்கள் சசிகலா மற்றும் ராம்மோகனராவ் தான் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிற சிகிச்சைகள் வழங்குவது போன்ற மருத்துவ நடைமுறை சார்ந்த சுமார் 20 ஆவணங்களில் கையெழுத்து போட்டுள்ள நிலையில், இருவரும் முக்கிய பொறுப்பு உள்ளவர்களாக ஆறுமுகசாமி ஆணையம் கருதுவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு மேல்சிகிச்சை அளிப்பது தொடர்பான விசயத்தில், ராம்மோகன்ராவ், ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என்று ஆணைய வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்