தமிழ்நாடு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மேலும் 4 வார காலத்திற்கு தொடர்கிறது.

தந்தி டிவி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை மாறுபட்ட கோணத்தில் செல்வதாக கூறி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அப்பலோ நிர்வாகம் முன்வைத்தது. அதற்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கபட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது அப்போலோ நிர்வாகம் தெரிவித்த புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் கோரப்பட்டது. இதனை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டதால் ஆறுமுசாமி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத்தடை மேலும் 4 வாரத்துக்கு தொடர்கிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை