ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருபவர் சக்திவேல். இவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த புக்கம்பட்டியில், வசித்து வந்த அவரது தாயார் மாது உடல்நலக் குறைவு காரணமாக இறந்துள்ளார். ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாத நிலையில், தாயின் உடலை வீடியோ காலில் காண்பிக்கப்பட்டு பார்த்து ராணுவ வீரர் கதறி அழுதார். பின்னர் தாயாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. காண்போர் நெஞ்சை கலங்கடிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.