Armstrong Case | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளிநாடு தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி - அதிரடி காட்டிய போலீஸ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த ரவுடி அஸ்வத்தாமன், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். சென்னை போலீசாரின் 'லுக் அவுட்' நோட்டீஸ் அமலில் இருந்த நிலையில், பாங்காங் செல்ல முயன்ற அவரை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட அவர் மீது, நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல முயன்றதற்காக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி நிபந்தனையுடன் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.