வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுகவுக்கு தடைவிதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவை இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த புகார் மனுவில் “தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழகத்தில் மகளிருக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்திருப்பது, ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றும் செயல்“ என சாடியுள்ளார்.